Latest News
    Post views-

    வெந்தணலில் குச்சவெளி இலந்தைக்குளம் பாடசாலை

    ஒவ்­வொரு மனி­தனும் ஒவ்­வொரு வித­மான செல்­வங்­களைப் பெற்­றுக்­கொள்ள ஆசைப்­ப­டுவர். குறிப்­பாக இவ்­வாறு ஆசைப்­ப­டுவோர் அழிந்து போகக்கூடிய­ செல்வங்­களில் ஆசை கொள்­வ­தனை விடுத்து அழியாச் செல்­வ­மான கல்விச் செல்வத்தினை பெறவே ஆசை கொள்ளல் வேண்டும் என்­கின்­றனர் நமது மூதாதையர்கள். கல்­வி­யா­னது வெள்­ளத்தால் அழி­யா­தது, வெந்­த­ணலால் வேகாது, கள்­வர்­களால் கொள்­ளை­யிட முடி­யா­தது, கொடுக்க கொடுக்க பொரு­குமே தவிர குறை­யாது.
    “கல்வி கரையில் கற்­ப­வர் நாள்­சிலமெல்ல நினைக்கிற் பிணி­பல.” என்­கி­றது நாலடியார். சில வாழ்நாட் பல் பிணிச் சிற்­ற­றி­வு­டைய மாந்தர் கரைதுறையற்ற கல்வியை முற்­றாகக் கற்றல் முடி­யா­தென்­பது இதன் பொருள். எனினும் பரந்­து­பட்ட இக்­கல்­வியில் சிற்­ற­ள­வை­யேனும் கற்றுச் சிந்தை­யிலி­­ருத்தி, அறிவுச் செல்­வத்தை சிரத்­தை­யுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்­ப­டை­கி­றது. மனிதன் மனிதனாகின்றான். கல்­வியின் மேன்மை பற்றி அன்று தொட்டு இன்று வரை பல நூல்­களும் பழ­மொ­ழி­களும் பறைசாற்றி வரு­கின்­றன. 
    “இள­மையில் கல்வி சிலையில் எழுத்து”  என்பர். அதா­வது, நாம் இளவயதிலிருந்தே கல்­வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்­கா­லத்தின் ஆணிவே­ராகத் திகழும். கல்வியின் மேன்­மை­யையும் சிறப்பையும் பற்­றி அல்-­குர்ஆன் தனது முதல் வசனத்தை “ஓது­வீ­ராக” என்றே ஆரம்­பித்­துள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி திருவள்ளுவரும் தனது திருக்­கு­றளில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதனை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கல்வி கற்­ற­வர்­களுக்கு மட்­டுமே முகத்தில் கண்கள் இருப்­ப­தா­கவும் பேதை­ய­ருக்கு கண்­க­ளிற்குப் பதி­லாக முகத்தில் இரு புண்­களே உள்­ளன என்றும் சிற்றறிவுடை­ய­வர்­க­ளுக்கு நுட்­ப­மான அறிவு சில வேளை­களில் காணப்பட்டாலும் அதனை அறி­வென பெரியார் கொள்­ள­மாட்டார் எனவும் கல்வி கற்­றோரே மனி­தர்கள் அன்றி கற்­காதோர் விலங்­கு­களே எனவும் திருவள்­ளுவர் கல்­வியின் மேன்மை பற்றி வலி­யு­றுத்­து­கின்றார்.
    இவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்த கல்­வியை அதுவும் இளமைக் கல்­வியை பெற்றுக்கொள்ள அல்லல்படும் ஒரு மாணவ சமூகம் பற்­றியே இக்­கட்­டுரை பிரதிபலிக்­கின்­றது. இலங்­கையில் ஏற்­­பட்ட யுத்­தத்­திற்கு பிற்­பாடு கல்­வியை பெற்றுக்­கொள்­வதில் பொது­வாக எல்­லோ­ருமே ஆர்வம் காட்­டு­வ­தனை அவதானிக்கின்றோம். தற்­போ­தைய சூழலில் அவற்­றுக்­கான வழி­களும் இலகுவாக்கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான ஒரு நிலையில் யுத்த காலங்­களில் கண்ட காட்­சி­களை காண்­பது போலவே திரு­கோ­ண­மலை மாவட்டம், குச்சவெளி கோட்டக்கல்வி அலு­வ­ல­கத்­துக்­குட்­பட்ட இலந்­தைக்­குள பாடசாலையை அவதானிக்க கிடைக்­கின்­றது. 
    குச்­ச­வெளி, சல்­லி­முனை பல்­வக்கை குள பிர­தே­சத்தில் அமைந்­துள்ள இலந்தைக்குள வித்­தி­யா­லயம் 2009.01.07ஆம் திகதி மீளத் திறக்­கப்­பட்டது. பாடசாலை. இப்­பா­ட­சாலை அமை­யப்­பெற்­றுள்ள கிரா­மத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்களுக்­கான வீட­மைப்பு வச­தி­களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 260க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்ற இக்­கி­ரா­மத்­திலே மேற்­சொன்ன பாட­சாலை அமை­யப்­பெற்­றுள்­ளது. 
    இப்­பா­ட­சாலை மாண­வர்கள் வைக்கோலால் வேயப்­பட்ட தற்­காலிக கொட்டில்­களில் கல்வி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது தொடர்­பி­லான புகைப்­ப­டங்கள் முகநூலில் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளன. முகநூல் நண்பர்கள் மத்தியில் பல­வி­த­மான கேள்­வி­களை இப் புகைப்­ப­டங்கள் தோற்றுவித்துள்ளன. எவ்­வித அடிப்­படை வசதிகளு­மற்ற ஒரு நிலையில் இயங்­கு­கின்ற இப்­பா­ட­சாலை யுத்த காலங்­களை நினை­வூட்­டு­வ­தா­கவே உள்ளது.
    இவ்­வி­டயம் தொடர்­பாக திரு­கோ­ண­மலை வலயக் கல்விப் பணிப்­பாளர் என். விஜேந்தி­ரனை தொடர்பு கொண்டு கேட்­ட­போது, இப்­பா­ட­சா­லைக்­கான காணி உரித்து தொடர்பில் பல சிக்­கல்கள் காணப்­ப­டு­வ­தனால் நிரந்­தர கட்டிடங்­களை நிர்மா­ணிப்­பதில் தடைகள் உள்­ள­தாக குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், எனவே அர­சாங்க அதிபர்,  பிர­தேச செய­லாளர் ஆகி­யோ­ரினால் பாட­சா­லைக்­கு­ரிய நிர்­மாண வேலை­களை குறித்த காணியில் மேற்­கொள்ள முடியும் என எழுத்­து­மூலம் கிடைக்­கப்­பெற்­றது. அச்­சந்­தர்ப்­பத்தில் மாண­வர்­க­ளுக்­கான குடிநீர் வசதி, கழி­வறை வச­திகள் போன்­றன ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. பின்னர் நிர்­மாண நடவடிக்­கை­களை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­து­மாறு கோரப்­பட்டு அறிவிக்கப்பட்டது.
    குறித்த காணியில் சர்சை இருப்­ப­தாக அறி­கின்றோம். சர்ச்­சைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு அதற்­கான பூரண அனு­மதி கிடைக்­கப்­பெ­று­மி­டத்து எம்மால் நிரந்­தரக் கட்­டி­டங்­களை நிர்­மா­ணிக்க முடியும் என்கின்றனர். குச்சவெளி இலந்தைக்­குள பாட­சா­லையில் 160 க்கும் அதி­க­மான மாண­வர்கள் கல்வி கற்ற நிலையில் தற்­போது 100 மாண­வர்கள் கல்­வி­கற்­கின்­றனர். பாடசாலை அதி­ப­ருடன் மொத்­த­மாக 07 ஆசி­ரி­யர்கள் கட­மை­யாற்றி வந்­தனர்.
    இவ்­வாண்டில் 02 ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் பெற்று சென்­றுள்­ளதால் தற்­போது 05 ஆசிரி­யர்­களே கட­மை­யாற்­று­கின்­றனர். இப்­பா­ட­சாலை தரம் 1 தொடக்கம் 5 வரையான மாண­வர்கள் கற்கும் ஆரம்பப் பாட­சாலை. தரம் 05 க்கு மேற்­பட்ட பாடசாலைக் கல்­வியை மேற்­கொள்­வ­தற்­காக இங்­குள்ள மாண­வர்கள் 06 கிலோமீற்ற­ருக்கு அப்­பா­லுள்ள குச்­ச­வெளி அல்-­நூ­ரியா பாட­சா­லைக்கு பயணம் மேற்­கொள்­கின்­றனர்.
    இவ்­வி­டயம் தொடர்பில் இலந்­தைக்­குள பாட­சாலை அதிபர் ஏ.ஏ.சி. பு­னீஸை தொடர்பு கொண்­ட­போது பல வர­லாற்று தக­வல்­களை எம்­மிடம் பகிர்ந்துகொண்டார். 
    யுத்த காலங்­களில் அங்­கு­மிங்கும் இயங்­கிய இப்­பா­ட­சாலை யுத்தம் முடிவுறப்போகும் தறுவாயில் 2009.01.07ஆம் திகதி சல்­லி­முனை பல்­வக்கை குளம் கிரா­மத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் நிர்மாணித்துக் கொடுக்­கப்­பட்ட வீட்­டுத்­தொ­கு­தியில் உள்ள சன­ச­மூக கட்­ட­டத்­திலே இப்­பா­ட­சாலை தற்­கா­லி­க­மாக திறக்­கப்­பட்­ட­தா­கவும், சிறிது காலத்தின் பின்னர் நிரந்­தரக் காணி அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது. பின்னர் தற்­கா­லிக கொட்­டில்­களில் இப்­பா­டா­லையை நடாத்­தி­வ­ரு­வ­தாக குறிப்­பி­டு­கின்றார் பாட­சாலை அதிபர்.
    அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், கடந்த அர­சாங்­கத்தில் திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்தில் இப் பாட­சா­லைக் காணிக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது. மேலும் காணி ஆணை­யா­ளரின் அனு­மதிக் கடிதமும் வழங்கப்பட்டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் ஒருசில சக்­திகள் எமது பாட­சாலை காணி விட­யத்தில் சிக்கல் நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தனை அனுமதிக்க முடி­யாது. இவ்வா­றான நிலையை இங்­குள்ள அரசியல்வாதிகளின் கவ­னத்­துக்கு கொண்டு வந்துள்­ள­துடன் அதற்­கான தீர்வினை பெற்­றுத்­த­ரு­வார்கள் என்று நம்­பு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார். 
    மேலும் அவர் குறிப்­பி­டு­கையில், 2015 ஆம் ஆண்டு ஒரு (01) மாணவன் புலமைப்ப­ரிசில் பரீட்சையில் சித்­தி­ய­டைந்­த­தா­கவும், 2016 ஆம் ஆண்டு மூன்று மாண­வர்கள் 148, 146, 144 என்­கின்ற அடிப்­ப­டையில் புள்­ளி­களை பெற்றுக்கொண்­டனர். 100 புள்­ளி­க­ளுக்கு மேல் 07 மாண­வர்கள் பெற்­ற­துடன், 70 புள்­ளி­களை 48 வீத­மா­ன­வர்கள் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்­பி­டு­வ­துடன். குச்­ச­வெளிக் கோட்­டத்தில் இணைப்பாடவிதான செயற்­பா­டு­களில் 01 ஆம் 02 ஆம் இடங்­களை இப்­பா­ட­சாலை பெற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறான பல வழிகளிலும் திறமையான மாணவர்களை கொண்டுள்ள இப்பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது எண்ணிலடங் காதவை. 
    நவீனங்கள் நிரம்பிவழிகின்ற ஒரு காலத்தில் வாழ்கின்றோம். அநேகமாக பாடசாலைகளிலுள்ள வகுப்பறைகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களிலுள்ள வகுப்பறைகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வெந்தணலில் தனது கல்வியை கற்றுக்கொள்கின்ற ஒரு நிலையை இலந்தைக்குள வித்தியால மாணவர்கள் அனுபவிப்பதனை அவதானிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.
    குச்சவெளி, இலந்தைக்குள பாடசாலை விவகாரம் தொடர்பில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரை தொடர்பு கொண்டபோது இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள காணியில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் இக்காணிக்கு உரிமம் கோருகின்றார். 
    பாடசாலை புல்மோட்டை
    குச்­ச­வெளி, இலந்­தைக்­குள பாட­சாலை விவ­காரம் தொடர்பில், திருகோணமலை மாவட்­டத்தைச் சேரந்த,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்­வரை தொடர்பு கொண்­ட­போது இப்­பா­ட­சாலை அமை­யப்­பெற்­றுள்ள காணியில் சர்ச்சை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.
    தனியார் ஒருவர் இக்­கா­ணிக்கு உரிமம் கோரு­கின்றார். பாட­சாலை புல்மோட்டை – திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் அமை­யப்­பெற்­றுள்­ளது. பிறிதொரு இடத்தில் இப்­பா­ட­சா­லையை நிர்­மா­ணிக்­கவும் முடி­யா­துள்­ளது. இப்­பா­ட­சாலை அமையப்பெற்றுள்ள சூழ­லிலே மக்கள் வாழ்­கின்­றனர். ஆகவே அர­சாங்க அதிபர், இங்­குள்ள அரச உயர் அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றுள்­ள­தா­கவும் இவ்­வி­ட­யத்தை தான் முன்­னின்று வெற்றிகொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்கொள்­வ­துடன், முதற்­கட்­ட­மாக தனது பாதீட்டு நிதி ஊடாக தள­பாட வச­தி­களை ஏற்ப­டுத்தி கொடுக்கவுள்ளதா­கவும் குறிப்­பிட்டார்.
    மேலும் அவர் குறிப்­பி­டு­கையில், திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள அரிசிமலை விவ­கா­ரத்­தினை தனி­யொ­ரு­வ­னாக ஆறு வரு­டங்கள் போராடி மீட்­டுக் கொடுத்துள்ளேன். அதற்­காக அல்லஹ்­வுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக கூறிக்­கொள்ளும் அன்வர், இவ்­வி­ட­யத்­தையும் மிகச் சுல­ப­மாக மீட்க முடியும் என நம்­பு­வ­தாக குறிப்பிடு­கின்றார்.உண்­மைதான் மாகாண சபை உறுப்­பினர் ஒரு இளைஞர், மிகத் துடிப்­பா­னவர், முஸ்லிம் அர­சி­யலில் பல­ரைப்­பற்­றியும் பல்­வேறு விமர்­ச­னங்கள் பெருக் ­கெடுக்கும் வேளையில், சமூ­கத்­துக்காய் பணி­யாற்­று­வதில் தயக்கம் காட்டாத ஒருவர். 
    இலந்­தைக்­குள அதி­ப­ரு­டைய பேச்­சிலும் அதுவே வெளிப்­பட்­டது. மாகாண சபை உறுப்­பினர் அன்வர், இவ்­வி­ட­யத் தில் சோர்­வில்­லாது தம்­முடன் இணைந்து பணியாற்­று­வ­தாக குறிப்­பி­டு­கின்றார்.பொது­வாக இப்பாடசாலை­யி­னு­டைய ஒட்டுமொத்த அவ­லங்­க­ளுக்கும் காரணம் காணி தொடர்­பான சட்­ட­மூ­லங்­களும், மாகா­ண­ச­பைக்­கு­ரிய அதி­கா­ரங்கள் பூரணமாக வழங்­கப்­ப­டா­மை­யுமே. நல்­லாட்சி அரசு பதவி­யேற்­புக்கு இவ்வாறான விட­யங்­க­ளையே காட்­சிப்­டுத்­தி­யது. ஆனால் தற்போ­தைய போக்­கினை அவ­தா­னிக்கும் போது புரிந்­து­கொள்­வது, கடந்த அரசாங்கத்துடன் கொண்­டி­ருந்த கோபத்தை தீர்த்­தீர்­களே தவிர, எங்­க­ளது வாக்குறுதி­க­ளுக்­காக வாக்­க­ளிக்­க­வில்லை. வாக்­கு­று­தி­களை நீங்­க­ளாக கற்பனை செய்­து­கொண்­டீர்கள் என்று சொல்­வ­த­னைப்போல் ஆட்சியாளர்களு­டைய மௌனம் பதி­ல­ளிக்­கின்­றது. 
    ஆக, முஸ்லிம் முத­ல­மைச்சர் அமர்ந்­தி­ருக்­கின்ற கிழக்கு மாகா­ணத்தில், அடிப்படையில் ஒரு கல்வி நிலை அதி­கா­ரி­யாக புடம்­போ­டப்­பட்­டவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். இவ்­வா­றா­ன­வர்கள் வீற்­றி­ருக்கும் ஒரு சபையின் ஆளுகைக்­குட்­பட்ட பகு­தியில் இவ்­வா­றான ஒரு பாட­சா­லையை என்னவென்று சொல்­வது. உலகில் அழிந்­து­போகும் செல்­வங்­களை அடைய எடுக்கும் முயற்­சிகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. அவ்­வா­றா­ன­வற்றை நுகர்வதற்கு ஆயுளில் அரை­வா­சியை கழிக்­கின்றோம். அவற்றால் இவ்வுலகிலும் மறு உல­கிலும் துன்­பமே அதிகம். ஆனால் மேன்மை தரக்­கூ­டிய ஒரு விட­யத்­துக்கு பொரு­ளா­தா­ரத்­தி­னையும், ஆற்­ற­லையும் நம்மில் எத்­தனை பேர் செல­வி­டு­கின்றோம்.
    தொடர்ந்து இவ்வாறான அவலங்களுடன் இலந்தைக்குள பாடசாலை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதனை அனுமதிப்பது என்பது அடிப்படை உரிமை மீறலாகவே பார்க்கப்படும்.எனவே, மேற்படி பாடசாலை விடயத்தில் கிழக்கு மாகாணசபை விரைந்து நடவடிக்கை எடுப்பதே இப்போதைக்குள்ள தேவை. அவ்வா றான முயற்சிகளை மேற்கொள்வோரே ஒளவையார் சொன்ன மன்னனுக்கு ஒப்பானவர்கள்.
    றிசாத் ஏ காதர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்