நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒருமைப்பாடு, சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறுபான்மைச் சமூகங்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமானது மூன்றாவது ஆண்டில் வீறுநடை போடுகின்ற ஒரு அமைதியான, சமாதான சூழலில் எமது நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்.
இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது போன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அனைத்து இன மக்களும் தமது வாக்குப் பலத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, நல்லாட்சிக்கு வித்திட்டதன் மூலம் அதற்கான் அத்திவாரம் இடப்பட்டிருக்கின்றது.
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
இருந்தபோதும் "எமது நாட்டை பொருத்த மட்டில் எப்போது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, இன சமத்துவம் பேணப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
ஆகையினால் சிறுபான்மைச் சமூகங்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எமது தாய் நாடு வளம் பெறவும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெற்றி கொள்வதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது போன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அனைத்து இன மக்களும் தமது வாக்குப் பலத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, நல்லாட்சிக்கு வித்திட்டதன் மூலம் அதற்கான் அத்திவாரம் இடப்பட்டிருக்கின்றது.
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
இருந்தபோதும் "எமது நாட்டை பொருத்த மட்டில் எப்போது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, இன சமத்துவம் பேணப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
ஆகையினால் சிறுபான்மைச் சமூகங்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எமது தாய் நாடு வளம் பெறவும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெற்றி கொள்வதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.