சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் டி.வி. தொடர்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன.
அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார்.