Post views-

சோடிக்கப்பட்ட விமர்சனங்களும் மௌனித்தஅரசியல்வாதியும்

(எம். ஜே. எம். சஜீத்)

ஒரு கட்சியில் இருந்துகொண்டு அக்கட்சியினையும்,அக்கட்சியின் தலைமையினையும் போற்றிப் பேசுவதும்,கட்சிதாவிச்சென்றதும் போற்றிப் பேசிய கட்சியினையும்தலைமையினையும் விமர்சித்து பேசுவதும் இலங்கைஅரசியலில் சர்வசாதாரணவிடயமாக மாறிவிட்டது.

அந்தவகையில் இவ்வாறான கேலிக்கூத்துக்கள் முஸ்லிம்அரசியல் கட்சிகளுக்குள்ளே மலிந்து காணப்படுகின்ற இக்காலத்தில் ஒருகட்சியில் இருந்துகொண்டு அக்கட்சியினாலும்,அக்கட்சியின் தலைமையினாலும்அரசியல்ரீதியாக பலவழிகளிலும் முன்னேற்றமடைந்தசுயநல அரசியல் வாதிகள் அந்தக்கட்சியைவிட்டு பின்னர்கட்சிதாவிச்சென்று விமர்சனம் செய்வதும் சர்வசாதாரணமான செயலா முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேகாணப்படுகின்றதுஇந்த செயலானது ரசியல் மற்றும்சமூகப் பார்வையில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவேநோக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான.எல்தவம் அண்மைக்காலமாக தேசிய காங்கிரசினையும்,அக்கட்சித் தலைமையினையும் கடுமையாகவிமர்சித்துவருவதனை ஊடகங்கள் வாயிலாகஅவதானிக்கமுடிகிறது. 

யார் இந்த அதால்லா…?

அதாஉல்லாவின் அரசியல் வரலாற்றை நோக்குமிடத்துஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில்இருந்து மறைந்த லைவர்அஷ்ரப் அவர்களினால் அரசியலுக்குள் நுழைந்து அவரின்பாசறையில் வளர்க்கப்பட்டவர்அதனால்தான் அவருக்குஅரசியல் ரீதியான முதிர்ச்சியும் பெரும் அனுபவமும் கொண்டவராக காணப்படுகிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்குஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்அஷ்ரபினால்தேசியப் பட்டியல் எம்.பி பதவி வழங்கப்பட்டமையை நாம்மறந்து விடவில்லைஅதன்பின்னர் 2000, 2001, 2004, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல்களில் வெற்றி பெற்று பாராளுமன்றஉறுப்பினராகவும்பிரதிக் கல்வி அமைச்சர்நெடுஞ்சாலைகள் அமைச்சர்கிழக்கு மாகாணஉட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்நீர் வழங்கல்வடிகாலமைப்பு அமைச்சர்மாகாண சபைகள் உள்ளுராட்சிஅமைச்சர் என பல அமைச்சுக்களில் அலங்கரித்ததுடன்நின்று விடாது மக்களுக்காக பல சேவைகளைச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம்எம்.எச்.எம் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் அக்கட்சிக்குரவூப் ஹக்கீமைத் தலைவராக்கியதில் அதால்லாவுக்குப்பெரும் பங்குண்டுகட்சிக் கொள்கைகளுக்கு மாற்றமானமுறையில் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பிழையானபோக்கினை உணர்ந்த அதாஉல்லா மு.காவை விட்டுவிலகிச்சென்று புதிய கட்சியினை ஆரம்பித்துசெயற்பட்டதுடன்தனக்குக்  கிடைத்த ரசியல்அதிகாரத்தை வைத்து அவர் ம்பாரை மாவட்டம் உட்படநாட்டின் நாலா பாகங்களிலும் சேவையாற்றத்தொடங்கினார்.

தவத்தின் இணைப்பு…!

அதன் காரணமாக அதாஉல்லா அக்கரைப்பற்று மக்களின்உள்ளங்களில் இடம்பிடித்த அரசியல்வாதியானார்அதாஉல்லாவின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமானஒரு அரசியல் ஆதரவாளராக ஈடுபட்டவர்களில் தவமும்ஒருவர்அதன் காரணமாக தவம் மீது அதாஉல்லா நல்லநம்பிக்கை வைத்திருந்தார்அதனால் கடந்த 2006ஆம்ஆண்டு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்  தவத்தைகளமிறக்கி  10129 (67.35%) வாக்குகளைப் பெற்று வெற்றிபெறச் செய்து 8 ஆசனங்களைப் பெற்றதுடன்அச்சபைக்குதவிசாளராகவும் தவத்தை வைத்து அழகு பார்த்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைதவிசாளராகவிருந்த தவம் அதாஉல்லாவோடு நகமும்சதையமாகவிருந்து வரின் அரசியல் நடவடிக்கைகளில்பிண்ணிப்பினைந்திருந்தார்.  இருந்தாலும் தவத்தின்செயற்பாடுகளில் அக்கரைப்பற்று மக்கள் திருப்திகண்டிருக்கவில்லை அதாஉல்லாவின் அரசியல்அதிகாரத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேசம் பாரியஅபிவிருத்திகளை கண்டதுடன் அதாஉல்லாவின் உச்சஅதிகாரத்தினூடாக அக்கரைப்பற்றில் மாநகர சபைஒன்றினையும்பிரதேச சபை ஒன்றினையும் ருவாக்கும்சந்தர்ப்பமும் அதாஉல்லாவுக்கு கிட்டியது.

அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலொன்றுக்கு2011ஆம் ஆண்டில் முகங்கொடுக்க நேரிட்டதுப்போதுஅக்கரைப்பற்று  மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்றுபிரதேச பைகளிலும் அதாஉல்லா தலைமையிலான கட்சிகுதிரைச் சின்னத்தில் தனித்து போட்டியிட ஆயத்தமானதுஅக்கட்சி சார்பாக தவம் உட்பட இன்னும் பலரும்போட்டியிட்டனர்அப்போது அதாஉல்லாவின் தேசியகாங்கிரஸ் கட்சியானது மேற்குறித்த இரண்டு சபைகளையும்கைப்பற்றியதுஅத்தேர்தலில் தவமும் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதுஅக்கரைப்பற்று மாநகரசபையில் 11821 வாக்குகள் பெற்று 8 ஆசனங்களையும்அக்கரைப்பற்று பிரதேச சபையில் 2261 வாக்குகள் பெற்று 6 ஆசனங்களையும் பெற்றனர்.

அக்கால கட்டத்தில் மேற்படி இரண்டு சபைகளுக்கும் யாரைதலைவர்களாக நியமிப்பது என்கின்ற சிக்கலானநிலையொன்றுக்கு அதாஉல்லா தள்ளப்பட்டிருந்தார்இருந்தபோதும் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில்போட்யிட்டு வெற்றி பெற்ற தவத்தை அக்கரைப்பற்றுமக்களின் விருப்பத்துக்கு மாறாக மேயராக நியமிப்பதற்குஅதாஉல்லா என்னவில்லை காரணம் அத்தேர்தலில் தவம்விருப்பு வாக்கின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில்இருந்தமையாகும்.  இதனால் அதாஉல்லாவுடன்நெருக்கமா செயற்பட்ட தவம் சற்று தூரமானார்அதனைத்தொடர்ந்து தவம் அகில இலங்கை மக்கள் காங்கிரசில்இணையப்போவதாகவும்பின்னர் மு.காவில் இணையப்போவதாகவும் செய்திகள் பரவிய வண்ணமிருந்தன.

இதுதொடர்பில் அதாஉல்லா செவிசாய்க்காமல் சற்றுமௌனமாகவே இருந்தார்சிறிது காலம் சென்றதும் தவம்மு.காவிலே இணைந்துகொண்டார்மு. காவில்இணைந்துகொண்ட மறுகனமே அவர் அதாஉல்லாவைவிமர்சிக்க தொடங்கினார்தவம் அதாஉல்லாவோடுஇணைந்து செயற்பட்ட காலப்பகுதியில் முகாவையும்அதன் தலைவரையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தமையைஇன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்மறந்துவிடவில்லை ஆனால் அந்தவிடயங்கள் தவத்தின் உள்ளங்களையே உறுத்திக்கொண்டே இருப்பது வெளிப்படையான உண்மையாகும்..

குறிப்பாக முகாவின் அரசியல் செயற்பாட்டைஅக்கரைப்பற்றில் நசுக்குவதற்கும் முகா தலைவரின்அக்கரைப்பற்று விஜயங்களின் போது தடைகளைஏற்படுத்துவதற்கும் முன்னின்று செயற்பட்டவர்களில் தவமும்பிரதான நபர் என்பதனையும் குறிப்பி்டாக வேண்டும்அப்படியான ஒருவர் இன்று மு. காவையும் அதன்தலைமையையும் புகழ்ந்தும்அதாஉல்லாவை விமர்சித்தும்பேசுவது அரசியலுக்கா நாடகமே என்கின்றார்அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகா போராளி ஒருவர்

குறிப்பாக அக்கரைப்பற்றின் மேயராக தன்னை அதாஉல்லாநியமிக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே தவம்கட்சி மாறினார் என்பது முழு அக்கரைப்பற்று மக்களும்அறிந்து வைத்துள்ள பரகசியமாகும்னால் இன்று முஸ்லிம்காங்கிரஸின் ஆரம்ப போராளி போல் தன்னை மக்களுக்குகாட்ட முனைவதும் ஊடகங்களில் அவதானிக்க முடிந்தாலும்முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் பலர்தவத்தினுடைய போக்கில் அதிருப்திகளையும்வெளியிட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகிறது.

ஆனால் இன்று தவம் அதாஉல்லா மீது
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்