-க.கிஷாந்தன்-
ஒரு தொகை மான் இறைச்சியினை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை 15.08.2016 அன்று வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை பொரலாந்தை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது குறித்த சந்தேக நபரிடம் மூன்று கிலோகிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




