(க.கிஷாந்தன்)
பதுளை சொரனாதொட்டை பிரதேச சபைக்குட்பட்ட புஸ்ஸெல்லா குன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
02.08.2016 அன்று இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், யாராவது ஒருவரால் குறித்த குன்றிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




