Post views-

கல்லடி வேலூர் இராமகிருஸ்ணா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன்னோடிக் கல்விக் கருத்தரங்கு

த.மயூரன்,கல்லடி
மட்டக்களப்பு கல்லடி வேலூர் இராமகிருஸ்ணா சனசமூக நிலையத்தின் அணுசரனையினால் இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மட்டக்களப்பின் சிறந்த விரிவுரையாளரினால் முன்னோடிக் கல்விக் கருத்தரங்கானது 10.08.2016 இன்று காலை 08.30 மணி தொடக்கம் பகல் 01.30 மணி வரை கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கில் கல்லடி வேலூர், ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களும், கல்லடி, விநாயகர் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டதுடன் இராமகிருஸ்ணா சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்