சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு 25.06.2016 சனிக் கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீத் , கல்முனை மாநகர உருப்பினர் AA.பஸீர் , அப்துல் ரஸ்ஸாக் (சட்டத்தரணி ) , பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆயுட் கால செயளாலர் கான் ஆசிரியர் அவர்கள் , மற்றும் ஆசிரியர்கள், பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான் மற்றும் துஆப் பிரார்த்தனையை மௌலவி முஸ்தபா அவர்கள் வழங்கிவைத்தார்.
( ஜி,முஹம்மட் றின்ஸாத் )




