கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் 600 மேற்பட்டோா் கொழும்பில் வாழ்கின்றனா். இவா்கள் வைத்தியா்கள், பொறியியலாளா் கணக்காளா், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள், மற்றும் அரச சேவையாளா்கள் , கம்பணிகளின் தலைவா்கள் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து aa. இக் கல்லுாாியின் பழைய மாணவா்களது கொழும்புக் கிளை கடந்த 15 வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகின்றது. இம்முறையும் வருடாந்த ஒன்று கூடுதலும், இப்தாா் நிகழ்வு இன்று(25) வெள்ளவத்தை மியாமி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு பழைய மாணவசங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவா் பொறியியலாளா் எம்.எம்.எம் மைசான் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு கல்லுாாி அதிபா் பி.எம்.எம் பதுா்த்தீன் மற்றும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பளா் டொக்டா் ஏ.எல். எம் நசீா் கலந்து கொண்டாா். அத்துடன் இந் நிகழ்வின் 200 க்கும் மேற்பட்ட கல்முனை சகிரியன்ஸ் கலந்து கொண்டனா்.






