ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஜனாதிபதிமக்கள்சந்திப்பு எனும் நிகழ்ச்சி 2015 ஜனவரி 5 ஆம் திகதி அனைத்துதொலைக்காட்சிகளிலும் ஒரேநேரத்தில் ஒளிபரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படுகின்றமை தேர்தல்கள் ஆணையாளரினால்வெளியிடப்பட்டுள்ள ஊடக நெறி முறைகளை மீறுவதாகும் என்று புதியஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனவின் சட்டத்தரணி கலாநிதிவிஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் கடிதம் மூலமாக தேர்தல்கள்ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளை இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவுசெய்துள்ளதாகவும் அதை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இரவுஅனைத்துத்தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அந்தக்கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் நிலைப்பாடுகள்மற்றும்தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட ஊடகநெறிமுறைகளை மீறுகின்றசெயற்பாடு இது எனவும் அந்தக்கடிதத்தில்வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினமோ அல்லது அண்மித்த தினமொன்றிலோ ஒளிபரப்பு செய்தால்அதற்கு இணையான ஒரு நிகழ்ச்சியை மற்றும் சமமான நேரப் பெறுதியில்எதிரணிபொது வேட்பாளரின் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்வது நடைமுறைசாத்தியமற்ற விடயம்என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வேலைத்திட்டமோ அல்லது அதை ஒளிப்பதிவு செய்தஅடிப்படையிலோ தற்போதைய ஜனாதிபதியை மாத்திரம் ஊக்குவிக்கும்வகையில் நிகழ்ச்சி ஒன்றைதொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒளி/ஒலிபரப்பு செய்வதை நிறுத்துவதற்குஉத்தரவிடுமாறும் தேர்தல்கள்ஆணையாளரை சட்டத்தரணி கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ கோரியுள்ளார்.(ம)



