கட்சிகளின் உத்தியோகபூர்வ சின்னங்களுடன் போலி வாக்குச்சீட்டுக்கள்
பலாங்கொடை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை அரசாங்க அச்சகத்தினால்
அச்சிடப்பட்டிருக்கும் என சந்தேகப்படப்படுகிறது. இது தொடர்பாக இரத்தினபுரி தேர்தல்
துணை ஆணையாளர் பல விசாரணைகளை தொடங்கியுள்ளார்.இந்த வாக்குசீட்டுகளில் 000200 -PE 2015 அரசாங்க அச்சகம் பி.வி. என
குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போலி வாக்குச்சீட்டுக்களில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் சின்னமான வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.




