Post views-

5 ஆயிரம் அதி­ர­டிப்­ப­டை­யினர்... 71ஆயிரம் பொலிஸார் தேர்­தல் கட­மை­களில்

download

எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு கோடியே 50 இலட்­சத்து நாற்­பத்து நான்­கா­யி­ரத்து நானூற்றி தொண்ணூறு பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளனர். அதே­வேளை நாட­ளா­விய ரீதியில் 12, 314வாக்­க­ளிப்பு நிலை­யங்களும், 1,419 வாக்­கெண்ணும் நிலை­யங்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் செய­லகம் மேலும் தெரி­வித்­துள்­ளது.
சட்ட விரோத தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் மற்றும் தேர்தல் வன்­முறை சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் தேர்தல் தினத்­தன்று அந்த நிலைமை மேலும் மோச­ம­டை­யலாம் என தேர்­தல்கள் கண்­கா­ணிப்பு அமைப்­புக்கள் தெரி­விக்­கின்­றன.
வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­க­ளுக்கு விசேட பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 5 ஆயிரம் அதி­ர­டிப்­ப­டை­யினர் அடங்­க­லாக 71100 பொலிஸார் தேர்தல் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் அவர்கள் எதிர்­வரும் 6ஆம் திக­தி­யி­லி­ருந்து தமது கட­மை­களை மேற்­கொள்­வார்கள்.
ஒவ்­வொரு வாக்­குச்­சா­வ­டிக்கும் தலா 3 பொலிஸார் வீதம் கட­மையில் நிறுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் அவ­சர சந்­தர்ப்­பங்­க­ளுக்­கென சகல பொலிஸ் பிரி­வு­க­ளிலும் விசேட கல­க­ம­டக்கும் படை­யினர் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது(டி)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்