கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 14.05.2017ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மீனவர்களுக்கான மீன் பெட்டி 60 பயனாளிகளுக்கும், GPS 10 பயனாளிகளுக்கும், பால் குவளை 25 பயனாளிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.






