உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகின்றது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. எனவே அடுத்த வாரம் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்பு இது தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் தேர்தலை உடனடியாக அறிப்போம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சர் அர்ஜுன ரனதுங்க பெற்றோலிய வளத்துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




