கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான மூன்றாவது நாள் வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சர் நசீர் அவர்கள் பாதீட்டை முன் வைத்து பேசினார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான ஆர்.எம்.அன்வர் உரையாற்றுகையில்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் பௌதீக வளம் மற்றும் ஆளணிகள் நிரப்படவேண்டுமெனவும், குறிப்பா க புல்மோட்டை தள வைத்தியசாலைக்கான வைத்தியர்கள், ஏனைய ஆளணிகள் மற்றம் பௌதீக வளங்களும் பகிர்ந்தளிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தேவைப்பாடு உள்ளது. குறித்த வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினூடாக நோயாளிகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் புல்மோட்டை பிரதேசத்திற்கான புதிய ஆயுர்வேத மத்திய மருந்தகம் மக்களினுடைய கஸ்ட நிலைமைகளை கருத்தில்கொண்டு அமைத்துத்தந்தமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், கிண்ணியா தள வைத்தியசாலை சுனாமியால் பாதிக்கப்பட்ட பின்னர் தற்காலிக கட்டிடமொன்றுக்கு நகர்த்தப்பட்டு பல நெருக்கடிக்கு மத்தியில் இயங்குவது பெரும் சவாலாக உள்ளது. குறித்த வைத்தியசாலைக்கான பூரண திட்டவாக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை உடனடியாக அமுல்ப்படுத்துவதுடன் சுகாதார அமைச்சர் ஆளணி பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். அத்தோடு மூதூர் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் அதன் தரமுயர்வு மற்றம் ஆளணி பற்றாக்குறை போன்ற விடயத்திலும். அமைச்சர் நிறைவு செய்ய வேண்டுமெனவம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவ்வாறே தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பௌதீக. வசதிகள் ஆளணிகள் நிரப்படவேண்டுமெனவும், முள்ளிப்பொத்தானை கந்தலாவை மத்திய மருந்தகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், குச்சவெளி பிரதேச வைத்தியசாலை,தோப்பூர் வைத்தியசாலை போன்றவற்றின் பௌதீக வளங்கள் ஆளணிகள் நிரப்பட வேண்டுமெனவும் அதற்கான வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கு சுகாதார அமைச்சிற்கு 333 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு 870 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட் டளவில் பார்க்கும்போது 537 ரூபா மில்லியன் குறைவாக உள்ளது. எனினும் மத்திய சுகாதார அமைச்சினூடாக பல மில்லியம் ரூபா கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டது குறித்து நாம் மாகாணம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே அமைச்சர் அவர்களே எதிர்காலத்தில் மூவின மக்களும் சரிசமமான முறையில் எடுத்துச்செல்ல தாங்களும் தங்களது அதிகாரிகளும் எதிர்வரும் காலங்களில் மக்களின் தேவை அறிந்து பணிபுரிய வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறிப்பிட்டார்.




