சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலகமும், அட்டாளைச் சேனை தேசிய கல்விக் கல்லூரியும் இணைந்து நடாத்திய சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விளிப்புணர்வு கருத்தரங்கு இன்று (02.10.2016) கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் கல்லூரியின் பீடாதிபதி அல் ஹாஜ் MIM. நவாஸ் அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் MI. அமீர் அவர்களும், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் திரு. அதிசய ராஜா அவர்களும், வளவாளர்களாக முஜீப் LLB அவர்களும், மனோ தத்ததுவ விசேட வைத்திய நிபுணர் நௌபல் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் மனோ தத்துவ சமூகவியல் மாவட்ட உத்தியோகத்தர் அஸார்தீன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரியாஸ், சிறுவர் உரிமைக்கான மேம்பாட்டு உத்தியோகத்தர் றிஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.