Post views-

ஒடிசாவில் பஸ் பாலத்திலிருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: 21 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள மனித்ரி பகுதியில் பஸ் ஒன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 50 அடி கால்வாயில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திலேயே 14 பேரும், காயத்தினால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்களில் தெரியவந்துள்ளது.
சுமார் 50 பேருடன் பாலத்தில் பயணித்த போது நெரிசல் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் பஸ்ஸினை மோதியுள்ளார்.
இதன்போது, பஸ் சுவற்றை உடைத்துக் கொண்டு கால்வாயில் வீழ்ந்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்