அனா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறி கிராமத்தில் பால் பதனிடும் நிலைய திறப்பு விழா நேற்று (சனிக்கிழமை) இடம் பெற்றது.
மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே . கணகராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர் பஞ்சாசரம், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான கதிர்காம தம்பி, மோகன், குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






