(க.கிஷாந்தன்)
வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும். 12.08.2016 அன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது நம்பிக்கை.
அந்தவகையில் மலையகத்தில் அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 12.08.2016 அன்று வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதோடு விசேட வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர்.




