-எம்.ஜே.எம்.சஜீத்-
பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் கல்வி கற்று ஒரு உயர் பதவிக்கோ அல்லது அரச நிறுவனத்திலோ அல்லது திணைகளத்திலோ தலைவராக செயல்படுகின்றபோது அங்கு இருக்கின்றவர்களால் உங்களை அடிமை படுத்த முயற்சிகின்ற போது அவ்வாறான சந்தர்பத்தில் உங்களுயைட சுயகௌரவத்தை இழந்து விடாதீர்கள்.
அவ்வாறு இழந்துவிடுவீர்களானால் உங்களுடைய கருத்துகளுக்கும், இருப்புகளுக்கும், சுய கௌரவத்துக்கும் அது ஆபத்தாகவே முடியும்.
என்னை அரசியலில் அடிமைபடுத்தி எனது கௌரவத்தை இழக்கச் செய்ய சிலர் முயற்சித்தனர் ஆனால் நான் அரசியல் அதிகாரங்களுக்காக எனது சுயகௌரவத்தை விட்டு கொடுக்கவில்லை என கிழக்கு மாகாண சபை முன்னால் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினறுமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தில் தனது நிதியொதுக்கீட்டிலான தளபாடங்களை கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று(18.11.2015) புதன்கிழமை பாடசாலை அதிபர் யு.எல்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சுபைர் அரசியல் அதிகாரங்களுக்காக சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.
எனது அரசியல் வாழ்வில் என்னை சில அரசியல் வாதிகள் அடிமைப்படுத்தி எனது கௌரவத்தை இழக்கச் செய்ய முயற்சித்தனர் ஆனால் நான் அரசியல் அதிகாரங்களுக்காக எனது சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
அதிகாரத்தை வைத்து யாரையும் அடிமைப்படுத்த முயற்சிக்க கூடாது. சுய கௌரவத்தை இழந்து அரசியல் செய்ய முடியாது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள மிகவும் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாக இந்தப்பாடசாலை உள்ளது.
வறுமையில் கல்வி கற்பதென்பது உயர்ந்த அந்தஸ்த்துக்கும் உயர் பதவிகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறந்து விடக் கூடாது.
எங்கு வறுமை அதிகம் இருக்கின்றதோ அங்குதான் சாதணையாளர்களாகவும் புத்திஜீவிகளாகவும் வருவார்கள்.
எனது அனுபவத்தில் நான் சந்தித்த புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள்இ சாதனையாளர்கள் எல்லாம் வறுமைக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
வறுமையைக் காரணம் காட்டி ஒரு போதும் கல்வியை இடை நடுவில் விட்டு விடக் கூடாது. அதே போன்று பாடசாலையை விட்டு இடைவிலகி விடக்கூடாது.
தொடர்ந்து கல்வி கற்று முன்னேற வேண்டும். முன்னைய காலங்களை விட இப்போதும் கல்விக்கு அரசாங்கம் உட்பட பலரும் உதவி செய்கின்றனர்.
இருக்கின்ற வளத்தினை வைத்து கல்வியை மேம்படுத்த வேண்டும். கடந்த காலங்களை விட இன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் படிப்படியாக முன்னேறி வருகின்றது.







