இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த இரண்டு கப்பல்களும் இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றது.
இதில் முதலாவது கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் . மற்றைய கப்பல் நாளை (28) கொழும்பை வந்தடையவுள்ளது.