Post views-

பாலமுனையில் கண்காட்சி

(எம்.ஜே.எம்.சஜீத்)

விஞ்ஞாத்துறையில் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்திசெய்யும் நோக்கில் பாடசாலை விஞ்ஞான ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான முன்னோடிக் கண்காட்சி நேற்று (31) பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ பஸ்மில் கௌரவ அதிதியாகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது  பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ பஸ்மில் கண்காட்சிக்கூடத்தினை திறந்து வைப்பதனையும்,  பிரதம அதிதிகாகக் கலந்துகொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் உட்பட அதிதிகள் கண்காட்சிக்கூடத்தினைப் பார்வையிடுவதனையும் படத்தில் காணலாம்.



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்