(MJM.Sajeeth)
ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர கிழக்கு மாபெரும் எழுச்சி மாநாடு நாளை (02.09.2016) வெள்ளிக்கிழமை பி.ப 4.00மணிக்கு ஏறாவூர் ஆற்றங்கரை Dr. அகமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.எம் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் எழுச்சி மாநாட்டில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. அனஸ் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.