(க.கிஷாந்தன்)
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் காணியும்,வீட்டுரிமையும்உட்படதொழிலாளர்களுக்கான மாத சம்பளம் ஆகியவற்றை வழங்க கோரி பத்தாயிரம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுமேடை ஏந்திய வாகன பவனி ஊடன போராட்டம் 14.08.2016 அன்று காலை தலவாக்கலை நகரில் ஆரம்பமானது.
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம் மேலும் பத்து தொழிலாளர்கள்அமைப்புகளை ஒன்றினைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தது.
தலவாக்கலைமத்திய பஸ் தரிப்படத்தில் ஆரம்பமான இந்த வாகன பாத யாத்திரை ஊடான போராட்டம் தொடர்ந்துகொட்டகலை, அட்டன் மற்றும் நோர்வூட் ஊடாக பொகவந்தலாவ நகர் வரை செல்லவுள்ளது.






