சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வௌிநாட்டு மதுபான போத்தல்கள் ஒருதொகை அம்பதலை பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அப் பகுதியில் இருந்து 168 போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி ஆறு இலட்சத்துக்கும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் கலால் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




