Post views-

இளம் வர்த்தகர் சகீமுக்கு 7 கோடி 80 லட்சம் ரூபாய் பொல்லு வைத்தவர்களே அவர்களைக் கடத்தினார்கள்..? சகீம் F.C.I.D. யில்முறைப்பாடு செய்திருந்தார்

கடத்தப்பட்ட கோடீஸ்­வர வர்த்­தகர் சகீம் சுலைமான் வெளி நாட்­டி­லி­ருந்து உடை­களை இறக்­கு­மதி செய்யும் பிர­தான இறக்­கு­ம­தி­யாளர் எனக் கூறும் பொலிஸார் குறித்த வர்த்­த­கரைப் பலர் மோசடி செய்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவ்­வர்த்­தகர் குற்றப் புல­னாய்வுப் பிரிவு  மற்றும் மோசடி தடுப்புப்  பிரிவு ஆகி­ய­வற்றில் நான்கு முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.
தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து  வர்த்­தகர் குற்றப் புல­னாய்வு பிரி­விலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்த்வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் வர்த்தகருக்கு மோசடி செய்தோர் அதிலிருந்து தப்பிக் கொள்ள  இந்த கடத்தலை முன்னெடுத்தனரா என்ற கோணத்திலும் மேலும் சில சந்தேகிக்கத்தக்க தடயங்களை மையப்படுத்தியும் விசாரணைகள் தொடர்கின்றன.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்