Post views-

கஞ்சா அடித்த மாணவ - மாணவிகள், போதை தலைக்கேறி கைகளை அறுத்துக்கொண்ட பரிதாபம்

செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாடசாலைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போதை தலைக்கேறிய நிலையில் தமது கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.  

பாடசாலை மாணவ, மாணவிகளின் கைகளில் காணப்பட்ட காயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி போதை தலைக்கேறியதால் போத்தல்களை உடைத்து அதன் மூலம் தமது கைகளில்காயங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், இந்த விடயம் தொடர்பாக அதிபர் செவனகல பொலிஸாருக்கு அறிவித்ததும் குறித்த மாணவர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது பல அதிர்ச்சியடையும் தகவல்களை மாணவர்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தாம் கஞ்சா உள்ளிட்ட போதையினை உட்கொண்டதோடு,வேறு சில போதைத்தரக்கூடியபானங்களையும் அருந்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் சந்தைகளில் காணப்படும் ஒரு சில குடிபானங்களுக்கு இனிப்பு வகைகள் கலந்துமாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இதனை அருந்தும் மாணவர்களுக்கு போதை ஏற்படுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

மாணவர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்த நபர் தொடர்பில் தேடிப்பார்த்து அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்துடன், கடும் எச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்ட மாணவர்களை பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்