Post views-

முகமது நபி ஸல் அவர்களை அவமதித்ததால் கொலை செய்தேன்: முஸ்லிம் சகோதரரின் அதிரடி வாக்குமூலம்


முகமது நபிகளை அவமதித்தார் என்பதை தான் நம்பியதால் ஸ்காட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் கடைக்காரர் ஒருவரை கொலை செய்ததாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அகமதியா என்ற சிறுபான்மை இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவரும், சமூகத்தில் பிரபலமான நபருமான அசாத் ஷா, தான் நடத்தி வந்த செய்தித்தாள் விற்பனை கடையில் குத்திக் கொல்லப்பட்டார்.
வட இங்கிலாந்தின் சுன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த தன்வீர் அகமது இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அசாத் ஷா தன்னை ஒரு தூதுவர் என கூறி, முஸ்லிம் நம்பிக்கையை அவமதித்தார் என தன்வீர் அகமது கூறியுள்ளார்.
1998ல் பாகிஸ்தானிலிருந்து கிளாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தார் அசாத் ஷா.
ஆகஸ்ட் மாதம் தன்வீர் அகமதுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
பெரும்பான்மை முஸ்லிம் பிரிவினர்களிலிருந்து அகமதியா பிரிவினர் வேறுபட்டு இருக்கிறார்கள் என்ற வாதத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முகமது நபிகள் இறுதியான தூதர் என்பதை அகமதியா பிரிவினர் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்வீர் அகமது - கொலை செய்தவர்
தன்வீர் அகமது – கொலை செய்தவர்
அசாத் ஷா - கொல்லப்பட்டவர்
அசாத் ஷா – கொல்லப்பட்டவர்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்