கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற நண்பர்கள் வட்டத்திற்கெல்லாம் எடுத்துகாட்டாக திகழ்கின்ற கல்குடா 92/93 நண்பர்கள் வட்டத்தின்
2016ம் ஆண்டுக்கான இஃப்தார் நிகழ்வனது இன்று 17.06.2016 வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுமார் 13 வருடங்களாக தொடர்ந் தேர்சியாக கல்குடா நண்பர்கள் வட்டத்தினால் நடாத்தப்பட்டு வரும் இஃப்தார் நிகழ்வானது இம்முறை 500
நூற்றுக்கும் மேற்பட்ட கல்குடா பிரதேசத்தில் உள்ள சகல துறைகளில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய நண்பர்கள் வட்டங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டான முறையில் இடம் பெற்றமை குறிப்பிடதக்க விடயமாகும். அது மட்டுமல்லாமல் சகல துறையினைறையும் உள்வாங்கி செயற்பட்டு வரும் குறித்த கல்குடா நண்பர்கள் வட்டமானது கல்குடா பிரதேசத்தின் அரசியல், கலாச்சார, சமூக பணிகளில் இயலுமான முறையில் தங்களினுடைய பங்களிப்பினை பிரதேசத்திற்கு ஓர் எடுத்துக்காடான முறையில் நடை முறைப்படுத்தி வருகின்றமையினை அண்மை காலங்களில் அவதானிக்க கூடிய விடயமாகவும் இருக்கின்றது.
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடா நண்பர்கள் வட்டத்தின் இஃப்தார் நிகழ்வு:-