ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பாக வேறு தரப்புக்களுடன் கூட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் சில உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் எதிர்காலத்தில் நடத்தக் கூடாது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமயில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கு புறம்பான வகையில் செயற்படும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.