Post views-

மகாநாயக்கர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியது ஹெல உறுமய

ஒற்றையாட்சி முறைக்கும், இறைமைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஆபத்து ஏற்படாது என மகாநாயக்கர்களுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது ஜாதிக ஹெல உறுமய. மல்வத்த பீட மகாநாயக்கர் திப்பெட்டுவாவே சுமங்கல தேரரை இன்று சந்தித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன, நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் ஒற்றையாட்சி முறைக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் அவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.(ம)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்